×

அணைகளை கையாளும் அதிகாரம் கோரி வழக்கு: பாமக வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக குழுவினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்க கர்நாடக குழுவினர் மறுத்து விட்டனர். காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுத்து விட்ட நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. காவிரி ஆணைய விதிகள் 10 (3-18)ன்படி தமது முடிவை செயல்படுத்த உதவும்படி ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுப்பதை தவிர காவிரி ஆணையத்திற்கு வேறு எந்த அதிகாரமும் இல்லை. அணைகளை கையாளும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை கையாளும் அதிகாரத்தை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர வேண்டும்.

The post அணைகளை கையாளும் அதிகாரம் கோரி வழக்கு: பாமக வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Pamaka ,CHENNAI ,BAMA ,Anbumani ,Tamil Nadu ,Cauvery Commission ,Delhi ,Dinakaran ,
× RELATED பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை;...